தென்றலை நான் உணர்ந்தது இல்லை
உன் சுவாசக் காற்று தொடும் வரை!
மலர்களை நான் ரசித்தது இல்லை
உன் கூந்தல் சூடும் வரை!
இசையில் நான் மயங்கியதில்லை
உன் கொலுசொலியில் மூழ்கும் வரை!
வார்த்தைகளின் பயன் தெரிந்தது இல்லை
உன் பேச்சின் சுவை அறியும் வரை!
உடல் மொழியினை புரிந்தது இல்லை
உன் நாணம் எனை ஆளும் வரை!!!
No comments:
Post a Comment